புதன், 7 செப்டம்பர், 2011

பக்தி வந்தால் புத்தி போய் விடும்! புத்தி வந்தால் பக்தி போய் விடும்!







மார்கழி விழா :- 

மார்கழி வந்தால் போதும் 
பார் கிழியப் பாடுகிறான் பக்திப்பாட்டு!
ஊர் உறங்கும் நேரத்தில் 
ஒலிப்பெருக்கி உதவியுடன் 
சீர்கெட்ட பாட்டையெல்லாம்
தினம் தினம் ஒலித்துடுவர் 
                                                             ஊர் உறக்கம் கெடுமென்று
                                                             உணர்வில்லாமல்,
                                                            கோர்வையாய்ப் பாடல்களை 
                                                             குரல்வழியே பரப்பிடுவர். 

"புற்றவல்குல் புனமயிலே போதராய்"

கற்ற திருப்பாவையைக் காதுகிழியக் கத்தினான் ஒருவன் உறக்கம் 
கெட் டெழுந்த ஒரிளைஞன் உணர்ச்சி மேலீட்டால்,......
"ஆ" என்று பல்கடித்தான். அழுத்தினான் தலையணையை! அவன் மீது குற்றமென்ன? அடங்காத குளிர்காலம் அப்போதோ அதிகாலை அவன் உணர்வினை கிளறியது. ஆண்டாளின் திருப்பாவை!
ஆர்த்தெழுந்த அவனுணர்வின் அடைக்கலம் அவன் தலையணை!
தீராத உணர்வோடு எழுந்தவன் திரும்பி நண்பனைக் கேட்டான், 
"நண்பா பாம்பு படம் போன்ற பெண்ணுருப்பை பெற்றவளே என்னருகே எழுந்துவா! என்று எவளை அழைக்கிறான்?" அடப்பாவி  அவனை அழைக்க எவருமில்லை அவன் பாடுகிறான் திருப்பாவை என நண்பன் விளக்கினான்.

திடிரெனக் கேட்டது அய்யப்பன் பாடல் 

"அரிக்கும் அரனுக்கும் அதிசயமாய் தோன்றியவன் அய்யப்பன்"
அழுத்தம் திருத்தமாய் சொன்னார் ஒருவர் "அரியும் அரனும் ஆனல்லவா?"
அருகிலுருந்த அன்பன் ஆமாம் என்றான். அடுத்தவன் அரும்பிய சிரிப்போடு திருப்பாவை கிளறிவிட்ட தீராத உணர்வில் இருப்புகொள்ளாதிருந்த அவனை அய்யப்பன் கதை ஆவேசப்படுதியது. அடங்காத உணர்வோடு அப்படியே பாய்ந்தான் அவன் நண்பன் மீது "அப்பா! நான் அறியல்லடா!"
அங்கிருந்து அகன்றான் அவன் நண்பன்.


மாசி மகம் :-
அன்று சமுத்திரமும்,மூத்திரமும் சமத்துவம் சகோரத்துவம் என்று கூட்டணி சேர்ந்து கொள்ளும்.குமரிக் கடலின் சமுத்திர ஜலத்தாலும், கும்பகோணத்தின் மூத்திரக் குளத்தாலும் பாவங்கள் கழுவப்படும்.



வைகாசி விரையம் :-

வைகாசி வந்தால் போதும் கைகாசைச் செலவிட்டு கண்ட கோவில்களுக்குத் தென்டப் பூசைகள் தீவிரமாய் நடந்துவிடும். பாலையும் தேனையும் கல்லில் ஊற்றிப் பக்தியைக் காட்டிப் பரவசமடைவர் செங்கல்லும் கருங்கல்லும் செய்த புண்ணியத்தை ஏங்கும் வயிற்றோன் ஏழை செய்ததிலையோ? எண்ணும்போது எரிச்சல் எழுகிறது!


















முருகன் :-

முருகனின் படைவீடெல்லாம்
முழுவீச்சில் எழுந்து நிற்கும்!
ஆறு படை வீடு என்பதெல்லாம்
அந்தக்காலம்! இப்போது
எத்தனைப் படை வீடென்று
எண்ணிப் பார்க்கும்போது
பக்தனுக்கு ஒரே குழப்பம்!
ஏனெனில், பகவானுக்கும் அதே குழப்பம்
செத்துப்போன சின்னப்பத் தேவர்
சினிமாவில் செய்த கலாட்டாவால்
ஆறு படை வீடுகளுக்கு
அடிஷ னல் படை வீடுகளாக 
அன்றாடம் ஒன்று முளைக்கிறது!
அதனால் மருதமலையிலிருந்து
பரங்கி மலை வரை 
அபிசியல் வீடு எது 
அன்னபிசியல் வீடு எது என்று 
அடையாளம் காண்பதில் 
ஆண்டவனுக்கே குழப்பம்!
அடியவர்களுக்கு குழப்பம் வராதா?
உருக்கமுடன் அழைத்தால் 
இருக்குமிடம் தேடிவருவான் என்று
சீர்காழி பாடியது சரியாகிவிட்டது!
தேசத்தின் பாதி ஜனத் தொகை 
இருக்குமிடம் எது என்று 
இறைவனுக்கு தெரியாமல் போகுமா?
அதனால் தான் 
பிளாட்பாரத்திற்கு 
குடிபெயர்ந்து விட்டான்
பிரணவ மூர்த்தி!
இப்போதெல்லாம் 
முருகன் கோயில் கொள்ளும் பிரகாரம் 
ஊரெங்கும் உள்ள பிளட்பாரம்!
அதுபோதும் துயரங்களுக்கு பரிகாரம்!
அதனால் தான் தேசமெங்கும் 
அவன் யுனிபாரம்! கோவணம்..........
தேசிய உடையாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.




அய்யப்பன் 

அய்ப்பசி முடிவில் 
அய்யப்பன் ஆட்சி கொள்வான்! ஆம் 
திருப்பதி செல்வாக்கு 
சபரிமலைக்கு திசை மாறும்!
ஆசாமி சாமியாவான்
அனுபவம் அதிகமானால் 
அவனே குருசாமியாவான்!
ஆளுக்கொரு "கலர்" துணியை 
அறையிலே கட்டிக்கொண்டு 
நாளுக்கு நாள் தாடியை 
நன்றாக வளர விட்டு 
கோளுக்கு மனிதன் சென்று
கொடி நாட்டும் காலத்தில் 
ஆணுக்குப் பிள்ளை 
அதிசயமாய்ப் பிறந்ததென்று 
அல்பமாய்ப் பொழுதை 
வெட்டியாய்க் கழித்திடுவர்!


கார்த்திகை தீபம் 

அய்யோ பசி! என்று
அவலக் குரல் எழும் நாட்டில் 
பொய்யால் புனைந்த 
புராணக் கதையை நம்பி
நெய்யால் தீபம் ஏற்றுவர்.
நெடுவரையில் (அண்ணாமலையில்)
கண்மூடிக் கிடக்கின்ற 
கணக்கற்ற மக்களின் 
கடைந்தெடுத்த அறியாமை
வின்முட்டி எரிகின்ற
விபரீத நிலை மாற்றி 
அண்ணாமலையில் 
அறிவு ஒளி வீசும் 
அய்யா (பெரியார்) விளக்கை
அணையாமல் ஏற்றிவைப்போம்.
அனைவரும் வாரீர்!

-----மஞ்சை வசந்தன்-------(அர்த்தமற்ற இந்துமதம் நூலிலுருந்து )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக